Monday, 5 December 2022

சிகரங்களை தொடுவோம் உயரங்களை எட்டிப் பிடிப்போம்

 ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்கள் எல்லோரும் சிகரங்களை தொடவேண்டும்.... உயரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என வாழ்த்தினார்கள்.

வெற்றியின் உச்சத்தை அடையவேண்டும் என்ற எண்ணத்தில், அப்படிபட்ட உந்து சக்தியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி வாழ்த்துகிறார்கள். இந்த வாழ்த்துகளானது நம்முடைய மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும், அப்போது தான் இந்த வாழ்த்துகளின் பலன் கிடைக்கும். 

"உன்னால் முடியும் தம்பி தம்பி         அட உனக்குள் இருக்கும் உன்னை  நம்பி"

கவிஞர் வைரமுத்து  அவர்களின் வரிகளில் வரும் இந்த திரைப்பட பாடலும் இதையே உணர்த்துகின்றன.
திருச்சி மலைக்கோட்டை உயரத்தில் நின்று கொண்டு பேசுகிறார், "நான் உயரத்தில் நிற்கிறேன்,  இப்போது என்னால் பேச முடியாது " என்று.

டெலிபோன் டவரில் உயரத்தில் நின்று வேலை செய்து கொண்டிருக்கும் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு செல்போனில் பேசுகிறார்,"நான் உயரத்தில் இருக்கிறேன் " என்று.

இருபது மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில்,  எட்டாவது மாடியில்  துப்பரவு பணி செய்து கொண்டிருப்பவர் பேசுகிறார், "நான் உயரத்தில் இருக்கிறேன் "என்று.

இவர்கள் அனைவரும் குறிப்பிடுவது
 போல்  இவையெல்லாம் உண்மையில் உயரங்களா?

அன்னை தெரசாவும், டாக்டர்.அப்துல் கலாமும் எந்த மாடியில் நின்றார்கள். தன் கருமமே கண்ணாக இருந்தார்கள். அதனால் தான் மக்கள் மனம் என்னும் தொட்டுவிட முடியாத உயரத்தில் இன்னும் இருக்கிறார்கள்.

உழைப்பால் உயர்ந்த வி.ஜி.பி.பன்னீர்தாஸ் சகோதரர்கள்,  வசந்த்&கோ நிறுவனர் வசந்தகுமார் அவர்கள்,  இதுபோல் இன்னும் எத்தனையோ பேர் சொல்லிக்கொண்டே போகலாம். 
வெற்றி இல்லாத வாழ்க்கை என்பது பிள்ளை இல்லாத வீடு போலாகும். அலை இல்லாத கடல் போலாகும். சுவாரசியம் இல்லாமல் போய் விடும்.ஒவ்வொரு நாளும் வெற்றியை தக்க வைத்து கொண்டே இருக்க வேண்டும்.  நேற்றைய வெற்றி பூரணமாவது, இன்று வருகிற புது வெற்றியினால் தான். வெற்றிக்காக போராடுவோம்.  சரித்திரம் நம்மை திரும்பி பார்க்கட்டும்.  வாழ்க்கையில் தினமும் சிகரத்தை தொடுவோம்.  சிகரங்களை தொடுவதையே வாழ்க்கையாக்க பழகிக்கொள்வோம். ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமையட்டும்.
https://youtu.be/VpW1P5dCw9s


Saturday, 8 October 2022

 நாகர்கோவில் கணபதி நகர் பகுதியில் மருதாணி மாத இதழ் அலுவலகம் திறப்பு இதில் கலை





மாமணி பழனியப்பிள்ளை திறந்து வைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலமான மருதாணி மாத இதழின் புதிய தலைமை அலுவலகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கணபதி நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது,இதில் கலந்து கொண்ட கிராமிய பாடகர் கலைமாமணி பழனியா பிள்ளை அலுவலகத்தை  திறந்து வைத்தார், மேலும் இந்நிகழ்ச்சியில் மருதாணி மாத இதழின் ஆசிரியர்.ஜெ.எம்.எஸ்.தியாகசீலன் உடனிருந்தனர்.

Friday, 28 February 2020

அன்பிற்குரியவர்களே ! இன்று நாம் தேசிய அறிவியல் தினம் கொண்டாடுகிறோம். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 28ம் நாள் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது சிறந்த அறிவியல் மேதையான சர்.சி.வி.இராமன் அவர்களின் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட இந்த நாளில் கொண்டாடப்படுகிறது. அறிவியலின் முக்கியத்துவம் என்ன? அறிவியல் எங்கே இருந்து கிடைக்கிறது?. தினசரி வாழ்க்கையில் நாம் அறிவியலின் துணை இல்லாமல் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியாது. காலையில் கண்விழித்து எழுவது முதல் இரவில் படுப்பது வரை நாம் அறிவியலை பயன்படுத்துகிறோம். அறிவியலாகவே வாழ்கிறோம். காலையில் முதலில் பல் தேய்க்க தொடங்குவது முதல் அதாவது கைகளை மடக்குவதிலிருந்து அனைத்திலுமே அறிவியல் நிறைந்து இருக்கிறது. ரோபோட் என்பது அறிவியல் வளர்ச்சி எங்கிறோம். அந்த வளர்ச்சிக்கு முதல் எடுத்துக்காட்டே மனிதன் தான். குழந்தைகள் விளையாடும் அனைத்து விளையாட்டிலும் அறிவியல் உள்ளது. குழந்தைகளுக்கு அறிவியலின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுப்போம். குழந்தைகளை விளையாட அனுமதிப்போம். புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுப்போம். மனிதன் அறிவியலோடு இணைந்து மாண்புள்ளவனாக வளரட்டும். வாழட்டும். மற்றவர்களையு
ம் வாழவைக்கட்டும்.

Tuesday, 7 April 2015

அன்பு  

 குடும்பம் என்பது, அன்பினால் கூடி   இன்பத்துடன்    நிறைவாக  வாழ்வை  நடத்தி வருவதாகும்.   அன்பைக் குறித்து திருவள்ளுவர் இப்படி சொல்கிறார்,         

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
(78)
விளக்கம்:

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே  காய்ந்தமரம்    தளிர்த்தாற்போல்    நிலையற்றதாம் என்று குறள் கூறுகிறது. 

         அன்பு செய்து வாழ வேண்டுமென்று சொன்னால் , ஏன் அன்பு செய்து வாழ வேண்டுமென்று என்று ஒரு கேள்வி. அன்பு செய்து வாழும்போது நமது மனம் லேசாகிறது.      மற்றவர்களுடைய      மனம்      சந்தோஷத்தால்     நிறைகிறது. அன்பினைக்    கொடுக்கும்   போது       நமக்கு     எதிராளி   இல்லாமல் ஆகிறது. எதிராளி    இல்லாமல்     ஆகும்போது      வன்முறை      இல்லாமல்      ஆகிறது. வன்முறை  இல்லாமல் ஆகும்போது  பூவுலகமே சொர்க்கம் ஆகும். இவ்வளவு மதிப்பு மிக்க அன்பை நாம் குடும்பத்தில் தான் கற்றுக் கொள்ள முடியும்.

Tuesday, 1 July 2014

என்  இனிய தோழர்களே ,தாய்பாலின் நன்மைகளை எடுத்துக்கூறும் விதமாகவும் தாய்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல்வாரம் தாய்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 120 நாடுகள் சர்வதேச தாய்ப்பால் வாரத்தை கடைபிடிக்கின்றன.குழந்தைக்கு தாய்பால்  கொடுத்து முதுமையில் அன்பையும், அரவணைப்பையும் பெறுவோம்.
அன்பைக்கொடுப்போம்
அன்பை பெறுவோம்

Wednesday, 19 March 2014

விஜயலெட்சுமி சில்க்ஸ் மணிமேடை அருகில் நாகர்கோவில்

என்னுடைய அனுபவத்தில் எழுதுகிறேன் . நல்ல கவனிப்பு , சிறந்த துணிவகைகள் , நம்பிக்கை, நாணயம். நீங்களும் ஒரு முறை போய் பாருங்கள் .நாகர்கோவில் நகரில் தரமான பட்டுத்துணித்தரங்கள் வாங்குவதற்கு சிறந்த ஸ்தாபனம்  
விஜயலெட்சுமி   சில்க்ஸ்                                                                                    மணிமேடை அருகில் ,                                                                                               நாகர்கோவில்       தியாகசீலன்                                                                                                                                                                             

Thursday, 13 March 2014

சினேகமலர்- மார்ச் மாதம் என்றாலே..........

என் இனிய தோழர்களே, 
                    மார்ச் மாதம் என்றாலே தேர்வுகளின் காலம். தேர்வுக்கு செல்லும் நீங்கள் போருக்கு செல்லுவது      போல்    தயாராக     வேண்டாம்.              கல்வி        என்பது         நம்மை      முழுமையாக மனிதனாக்குவதற்கும்,  நல்லதொரு வாழ்க்கை நமக்கு கிடைப்பதற்கும் வேண்டியாகும். கடினமாக உழைத்திடுங்கள் .கல்வியில் முழு வெற்றி பெற்றிடுங்கள். இந்த உலகம் தன் இரண்டு கைகளையும் விரித்து உங்களை வரவேற்கிறது. இன்று வெற்றியின் உச்சாணிக்கொம்பில் இருப்பவர்கள் எல்லாம் , அவர்களுடைய வெற்றிக்காக உழைக்க வேண்டிய காலத்தில் முழுமையாக உழைத்தவர்கள். தியாகசீலன்   

Wednesday, 12 March 2014

thyagaseelanjms.blogspot.com உறவுகளை மதிப்போம்

என் இனிய தோழர்களே
                           உறவுகளை மதிப்போம், ஏனென்றால் உறவுகளிடமிருந்துதான் மற்றவர்களை  அன்பு செய்யவும் ,மதிக்கவும் ,உதவி செய்யவும் நாம் படிக்கிறோம். உறவும், உறவினர்களும் இறைவன் தந்த வரம்.தியாகசீலன்

Tuesday, 11 March 2014

என் அன்பு தோழர்களே, அன்புடன் வாழ்த்துகிறேன். ஒவ்வோரு விடியலும் நமக்காகவே வருகின்றன. நம்மை வாழ்க்கையில் வெற்றி பெற அழைக்கின்றன. நாம் எப்பொழுதும் பத்தோடு பதினொன்றாக இருக்கக்கூடாது . நாம் எப்போதும் தனியாக வெற்றி பெற வேன்டும். நாம் இந்த உலகத்தை திரும்பிப் பார்க்கக்கூடாது, இந்த உலகம் தான் நம்மை திரும்பி பார்க்க வேண்டும். புது புது விஷயங்களோடு உங்களை சந்திக்கிறேன். வாழ்க வளமுடன்.         தியாகசீலன்

Monday, 10 March 2014

சினேகமலர் - முதல் வணக்கம்

என் அன்பு தோழர்களே  இன்று முதல் தினமும் உங்களை சந்திக்கிறேன். என்னுடைய எல்லா பதிவுகளையும் வாசியுங்கள். உங்கள் அபிப்பிராயங்களை எழுதுங்கள். பகிர்ந்துகொள்வோம். நன்றி .